வாக்களிக்க பணம் பெற்றது நிருபிக்கப்பட்டால் வாக்காளர்கள் மீதும் கடும் நடவடிக்கை – தேர்தல் அதிகாரி எச்சரிக்கை!
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு புதிய எச்சரிக்கை ஒன்றை பிறப்பித்துள்ளார். இது குறித்த கூடுதல் விவரங்களை இங்கு காண்போம்.
தேர்தல் அதிகாரி எச்சரிக்கை:
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அவர்கள் தேர்தல் பணிகள் குறித்து தமிழக தலைமை செயலாளர், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் தேர்தல் முன்னேற்பாடுகள், பக்கத்து மாநிலங்களுடன் தகவல்களை பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட பல செய்திகள் விவாதிக்கப்பட்டன. தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் மீது பொது மக்கள் வீட்டில் இருந்த படியே சி-விஜில் ஆப் மூலம் பொதுமக்கள் புகார் அளிக்க முன் வர வேண்டும் எனவும் இது குறித்த போதிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் எனவும் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
Follow our Instagram for more Latest Updates
இந்த ஆப் மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, சுவர் விளம்பரம், 10 மணிக்கு மேல் பிரசாரம் உள்ளிட்ட தகவல்களை புகார் கொடுக்க முடியும். அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் இருந்து அதிக புகார்கள் பெறப்பட்டுள்ளது. வாக்களிக்க பொதுமக்களுக்கு பணம் கொடுப்பது குற்றம். அதேபோன்று, பொதுமக்களும் வாக்களிக்க வேட்பாளர்களிடம் பணம் பெறுவதும் குற்றம். இந்த ஆப் மூலம் இது குறித்த புகார்கள் பெறப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.