தமிழகத்தில் மே 11 முதல் ஸ்டெர்லைட் ஆக்சிஜன் – தொழில்துறை அமைச்சர் பேட்டி!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதற்கு தொழிலதிபர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
முழு ஊரடங்கு அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நிலைமையை சரி செய்ய அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 28 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதனால் கொரோனா சங்கிலியை உடைக்க 2 வாரங்கள் முழு ஊரடங்கு அறிவிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி மே 10 ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் அரசு, தனியார் தொழில் நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் மே 24ம் தேதிக்கு பின்னர் முழு ஊரடங்கு? முதல்வர் விளக்கம்!
இது குறித்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், “கொரோனா பரவல் சங்கிலியை தடுக்க அரசு 14 நாட்கள் முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. மக்கள் நலனுக்காகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தொழிலாளர்கள் ஆதரவு வழங்க வேண்டும். மேலும் ஆக்சிஜன் தொழிற்சாலைகள் மூலமாக மே 11 ஆம் தேதி முதல் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. ஸ்டெர்லைட் மூலமாக தமிழகத்திற்கு 31 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கும். தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க தொழில்துறை முடுக்கி விடப்பட்டுள்ளது”, என அவர் தெரிவித்துள்ளார்.