கிராமப்புற மக்களுக்கு சிறப்பு மருத்துவ வசதி கிடைக்க நடவடிக்கை – புதுச்சேரி அரசின் சூப்பரான அறிவிப்பு!!
புதுச்சேரியில் சமூக மருத்துவத் துறை சார்பில் கூட்டு மாநில மாநாடு நடைபெற்றது. இதில் அனைத்து கிராமப்புற மக்களுக்கும் மருத்துவம் கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
சிறப்பு மருத்துவம்
புதுச்சேரியில் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள சமூக மருத்துவத் துறை சார்பாக ‘கொரோனா தொற்றுக்கு பிந்தைய காலத்தில் விரிவான ஆரம்ப சுகாதார சேவையை வலுப்படுத்துதல்’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இன்று கூட்டு மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்வர் கூறியிருப்பதாவது, புதுச்சேரியில் 10 ஆயிரம் பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Follow our Instagram for more Latest Updates
மேலும் கீழ்தட்டு மக்களுக்கு மருத்துவ வசதி கிடைப்பதற்கு ஆரம்ப சுகாதார நிலையங்களை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். அத்துடன் காச நோயை கண்டறிய நடமாடும் எக்ஸ்ரே கருவியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாக கூறினார். கிராமப்புறங்களில் நோய் பரவாமல் தடுப்பதற்கு செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் இருக்கும் நோய்க்கான அறிகுறிகளை கண்டறிந்து மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் – மக்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம்!
மேலும் இவர் கூறியதாவது, மருத்துவர்கள், செவிலியர்களை அதிகமான அளவு பணியில் அமர்த்தி கிராம மக்களுக்கு சிறந்த மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என தெரிவித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் புதுச்சேரியில் உலக தரம் வாய்ந்த மருத்துவமனைகளை உருவாக்க வேண்டும் என முதல்வர் ரங்கசாமி அவர்கள் கூறியுள்ளார்.