ரேஷன் கார்டில் புதிய நபரின் பெயரை சேர்ப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
இந்தியாவில் ஆதார் மற்றும் பான் அட்டையை போலவே மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்று ரேஷன் கார்டு. இதன் மூலம் மக்கள் மலிவு விலையில் பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம். இந்நிலையில் ரேஷன் கார்டில் புதிய நபர்களின் பெயரை எப்படி சேர்ப்பது குறித்து இப்பதிவில் விரிவாக காண்போம்.
எளிய வழிமுறைகள்:
நியாயவிலை பொருட்கள் வழங்கும் வகையில் இந்தியாவில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் கார்டு அனைத்து அரசு சார்ந்த செயல்பாடுகளுக்கும் முக்கிய ஆவணமாக கருதப்பட்டு வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரேஷன் கார்டில் அந்தந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களும் இடம் பெற்று இருப்பது அவசியம். நாடு முழுவதும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் என வகைப்படுத்தப்பட்டு ரேஷன் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 3 முதல் 8 – 12ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் மட்டும் திறப்பு – மாநில அரசு உத்தரவு!
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ரேஷன் கார்டில் யாருடைய பெயராவது இல்லாமல் இருந்தால் அதனை உடனடியாக சேர்க்க வேண்டும். இதனை செய்ய முன்பு தாலுகா அலுவலகத்திற்கு பொதுமக்கள் செல்வார்கள். ஆனால் இப்போது ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக இணையதள முகவரி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரேஷன் கார்டில் புதிய நபரின் பெயர்களை சேர்த்துக்கொள்ளலாம். இணையதளத்தில் இதற்கான அதிகமாக வெப்சைட்டுகள் உள்ளன. அதில் நாம் எந்த மாநிலத்தில் வசிக்குறோமா அந்த மாநில லிங்க் மூலம் ரேஷன் அட்டையில் பெயர்களை சேர்த்துக்கொள்ளலாம்
TNPSC கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!
அதாவது புதிய பெயர் என்றால் குழந்தையின் பெயர் அல்லது திருமணமாகி புதிதாக ஒரு பெண் வந்தால் அவரது பெயர் இணைக்க வேண்டும். இதனை செய்ய முதலில் ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும். பெண் உறுப்பினரின் ஆதார் அட்டையில் கணவரின் பெயர் இருப்பது அவசியம் . ஏனெனில் அவரது ஆதார் அட்டையில் தந்தை பெயருக்கு பதிலாக கணவர் பெயரும், முகவரியும் மாற்றம் செய்ய வேண்டும். குழந்தையின் பெயரை சேர்க்க தந்தையின் பெயர் கட்டாயம் இருக்க வேண்டும். அவ்வாறு ஆதார் அட்டை புதுப்பிக்கப்பட்ட பின்னர் ஆதார் அட்டை நகலுடன் ரேஷன் கடைகளில் விண்ணப்பத்தை கொடுக்க வேண்டும்.