பிப்ரவரி 3 முதல் 8 – 12ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் மட்டும் திறப்பு – மாநில அரசு உத்தரவு!
மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்று நிலைமை குறைந்து உள்ளதால், 8 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா 3ம் அலைத்தொற்று பரவல் சரிவடைந்து வருகிறது. கடந்த மாத துவக்கத்தில் அதிகபட்சமாக கொரோனா பாதிப்புகளை பதிவு செய்து வந்த பல மாநிலங்களில், தற்போது புதிய தொற்றின் தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது. அந்த வகையில் மேற்கு வங்க மாநிலத்திலும் தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட சரிவை தொடர்ந்து, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் நாளை (பிப்.3) முதல் மீண்டும் தொடங்கும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
TNPSC கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய முதல்வர், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பாலிடெக்னிக் நிறுவனங்கள் அனைத்தும் பிப்ரவரி 3 அன்று மீண்டும் திறக்கப்படும். என்றாலும் தொடக்கப் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இது தவிர அம்மாநிலத்தில் கொரோனா தொற்று நிலைமை மேம்பட்டு வரும் சூழலில் ஊரடங்கில் சில தளர்வுகளை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இப்போது மாநிலம் முழுவதும் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும்.
தமிழகத்தில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பிப்.5 கடைசி நாள்!
மேலும் உணவகங்கள், பார்கள் மற்றும் திரையரங்குகள் ஆகியவை 75% திறனில் செயல்படும். பூங்காக்கள் மற்றும் சுற்றுலா இடங்களும் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுடன் மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மும்பையில் இருந்து கொல்கத்தாவிற்கும், டெல்லியில் இருந்து கொல்கத்தாவிற்கும் தினசரி விமானங்கள் இயக்கப்படும் என்றும் இங்கிலாந்து – கொல்கத்தா விமான பயணிகள் ஆர்டி-பிசிஆர் சோதனை அறிக்கை உட்பட்ட வழக்கமான கட்டுப்பாடுகளை தொடரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.