TNPSC கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக கூட்டுறவுத் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டு வருகிறது.
TNPSC வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் TNPSC தேர்வாணையம் அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதற்கான போட்டித்தேர்வுகளையும் நடத்தி தகுதியானோர் தேர்ந்தெடுக்கப்பட்டு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. 2022ம் ஆண்டு போட்டித் தேர்வுகள் குறித்த கால அட்டவணையை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதில் குரூப் 2 மற்றும் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பு பிப்ரவரி, மார்ச் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பிப்.5 கடைசி நாள்!
அதில் ஏப்ரல் 3ம் வாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக கூட்டுறவுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கூட்டுறவுத்துறையில் 8 தணிக்கை பதவிகளுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் ஆட்கள் தேர்தெடுக்கப்படவுள்ளனர். இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க விரும்புவோர் கூட்டுறவு அல்லது எம்,காம்., எம்.காம் (கூட்டுறவு) மற்றும் கூட்டுறவில் டிப்ளோமா அல்லது ஐசிஏஐ முடித்திருக்க வேண்டும்.
பிப்.10 வரை தினசரி 7 மணி நேரம் முழு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
தகுதியுடையவர்கள் http://www.tnpsc.gov.in அல்லது http://www.tnpscexams.in என்ற இணைய பக்கம் வாயிலாக 150 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மேற்கண்ட பணியிடத்திற்கு ஏப்ரல் 30ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும். காலை முதல் தாளும் மதியம் இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறும். கூட்டுறவு, வணிகவியல் மற்றும் கணக்கியல் பாடப்பிரிவுகளில் இருந்தும் பொது அறிவு பாடப்பிரிவுகளில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படும்.