ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் – புலம்பும் தொண்டர்கள்!
தேமுதிக கட்சியின் தலைவரான விஜயகாந்தை கடந்த ஒரு சில ஆண்டாக எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் பார்க்க முடியவில்லை என்று கட்சியின் தொண்டர்கள் தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் விஜயகாந்தின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்:
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் விஜயகாந்த். இவர் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருந்தார். அதன் பின்னர் நடந்த நடிகர் சங்க தேர்தலில் பங்குபெற்று அங்கும் வெற்றி பெற்று தலைவர் ஆனார். அரசியலில் ஆர்வம் கொண்ட இவர் தமிழக சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராகவும் மாறினார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே தவணையில் 18 மாத DA நிலுவைத் தொகை? விரைவில் அறிவிப்பு!
அதனை தொடர்ந்து அவருக்கு திடீரென சிறுநீரக கோளாறுகள் ஏற்பட்டதால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு சில ஆண்டுகளாகவே முழுமையாக ஓய்வில் இருந்து வருகிறார். மேலும் இதனால் அவர் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வது இல்லை. அவரின் கட்சி அலுவலகத்திற்கு மட்டும் அவ்வப்போது வந்து செல்வது உண்டு. இந்த நிலையில் தற்போது 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் ஒட்டுமொத்தமாக 12,838 உறுப்பினர்களை தேர்ந்து எடுக்க நகர்ப்புற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக அடுத்ததாக மூன்றாம் நிலையில் இருந்த தேமுதிக கட்சி 35 இடங்களில் மட்டும் தான் வெற்றி பெற்றுள்ளது.
தலைநகரில் தொடரும் ஊரடங்கு, தீவிரமடையும் ரஷ்யாவின் தாக்குதல் – 4வது நாள் போர்!
வெற்றி பெற்ற 35 வேட்பாளரும் தேமுதிக தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் மற்றும் பொருளாளர் பிரேமலதாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று அவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். ஏனென்றால் விஜயகாந்த் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசாமல் இருந்தாலும் தலைவர் போல் கம்பீரமாக அமர்ந்து இருப்பது தொண்டர்களுக்கு தைரியமாக இருக்கும். ஆனால் தற்போது மிகவும் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போயிருக்கிறது வருத்தத்தை அளிக்கிறது என்று தொண்டர்கள் கூறியுள்ளனர்.