வாவ்.. தீபாவளிக்கு ஸ்வீட் நியூஸ் சொன்ன மாநில போக்குவரத்து கழகம் – மக்கள் நிம்மதி பெருமூச்சு!

0
வாவ்.. தீபாவளிக்கு ஸ்வீட் நியூஸ் சொன்ன மாநில போக்குவரத்து கழகம் - மக்கள் நிம்மதி பெருமூச்சு!
வாவ்.. தீபாவளிக்கு ஸ்வீட் நியூஸ் சொன்ன மாநில போக்குவரத்து கழகம் - மக்கள் நிம்மதி பெருமூச்சு!
வாவ்.. தீபாவளிக்கு ஸ்வீட் நியூஸ் சொன்ன மாநில போக்குவரத்து கழகம் – மக்கள் நிம்மதி பெருமூச்சு!

நாடு முழுவதும் வரும் அக்.24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பயணிப்பர். இதனால் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனை சரி செய்யும் வகையில் மகாராஷ்டிரா அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சிறப்பு பேருந்து:

இந்தியாவில் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வெளியூர்களில் தங்கி பணிபுரியும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வர். மேலும் பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இடம் பெயர்ந்து வாழும் மக்களும் பண்டிகை நாளில் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்வர். அதனால் மற்ற நாட்களை விட இந்த விடுமுறை தினத்தில் பேருந்து மற்றும் ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும்.

இந்த கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்து துறை சார்பாக கூடுதல் மற்றும் சிறப்பு பேருந்து, ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் இதற்கான டிக்கெட் முன்பதிவுகளும் 2 மாதங்களுக்கு முன்பே தொடங்கி விடுகிறது. அந்த வகையில் ரயில்வே துறை சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது அனைத்து மாநிலங்களும் தீபாவளி சிறப்பு பேருந்துகள் குறித்த விவரங்களை வெளியிட்டு வருகிறது. மற்ற மாநிலத்தை தொடர்ந்து மகாராஷ்டிராவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் பயணம் செய்ய ஏதுவாக அக்டோபர் 21ம் தேதி முதல் 31ம் தேதி வரை சிறப்பு பஸ்களை இயக்கப்படவுள்ளதாக எம்.எஸ்.ஆர்.டி.சி தெரிவித்துள்ளது.

நெருங்கும் தீபாவளி: ராக்கெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை – உற்சாகத்தில் மக்கள்!

Exams Daily Mobile App Download

இது குறித்து எம்.எஸ்.ஆர்.டி.சி வெளியிட்ட அறிவிப்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாநிலத்தில் 1,494 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதில் அவுரங்காபாத் மண்டலத்தில் மட்டும் 368 பேருந்துகள் இயக்கப்படும். அதே போல புனேவில் 358 பேருந்துகளும், நாக்பூர் மண்டலத்தில் 274 பேருந்துகளும், மாநில தலைநகர் மும்பையில் 228 பேருந்துகளும் மற்றும் அமராவதி மண்டலத்தில் இருந்து 71 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!