மாநிலத்தில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அரசு திடீர் விளக்கம்!

0
மாநிலத்தில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அரசு திடீர் விளக்கம்!
மாநிலத்தில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அரசு திடீர் விளக்கம்!
மாநிலத்தில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அரசு திடீர் விளக்கம்!

மத்தியபிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் முன்னதாக அதிகரித்து வந்த காரணத்தால் இரவு ஊரடங்கு அமலில் இருந்து வந்த நிலையில், தற்போது இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இரவு ஊரடங்கு:

கொரோனா தொற்றின் 2ம் அலை நாடு முழுவதும் இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் பல மாதங்களுக்கு பல மாநிலங்களிலும் அமலில் இருந்தது. இதன் விளைவால் செப்டம்பர் மாத வாக்கில் கொரோனா பாதிப்புகள் குறைந்து நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்பியது. இதனால் படிப்படியாக விதிக்கப்பட்டிருந்த கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில், தான் மீண்டும் டிசம்பர் மாத இறுதி முதல் கொரோனா 3ம் அலை பரவ தொடங்கியது.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்த ட்விஸ்ட் – சேரப்போகும் பாரதி, கண்ணம்மா & ஹேமா!

இந்த முறை உயிரிழப்புகள் ஏற்படுவது குறைவாக இருந்தாலும், பரவும் வேகம் மற்றும் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது. இதனால் நோய் பாதிப்பின் நிலைமையை பொறுத்து மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தது. மத்திய பிரதேச மாநிலத்தில் ஓமைக்ரான் வகை வைரஸ் பரவல் அதிகரித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பரில் இரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மாநிலத்தில் விதிக்கப்பட்ட மற்ற அனைத்து தொற்றுநோய் கட்டுப்பாடுகளும் ஏற்கனவே திரும்பப் பெறப்பட்டுள்ளன.

TNPSC குரூப் 2 & 2A தேர்வர்கள் கவனத்திற்கு – இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு! விண்ணப்ப பதிவு துவக்கம்!

தற்போது கோவிட்-19 நேர்மறை விகிதம் 1 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பிப்ரவரி 22 நள்ளிரவு முதல் இரவு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுகிறது என்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் செவ்வாய்க்கிழமை ட்வீட் செய்துள்ளார். இருப்பினும், மக்கள் அனைத்து வகையான கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கூறினார். ஹோலி, ரங்கபஞ்சமி மற்றும் பிற பண்டிகைகளைக் கொண்டாடும் போது மக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!