ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி மாநில அரசின் மாஸ் திட்டம்!
ஆந்திரா மாநிலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் சர்க்கரை மற்றும் பருப்பு போன்றவற்றை வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்த்துமஸ் பரிசு:
மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களுக்கு உதவும் வகையில் ரேஷன் திட்டத்தின் மூலம் தானியங்களை இலவசமாகவும், மலிவு விலையிலும் வழங்கி வருகிறது. ஆனால் மக்கள் நேரடியாக ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டும். நாட்டிலேயே முதன்முறையாக ஆந்திரா மாநிலத்தில் ரேஷன் பொருட்கள் அனைத்தும் போர்ட்டபில் முறையில் வாகனம் மூலம் நேரடியாக வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டது.
TNTRB 2331 உதவிப் பேராசிரியர்கள் வேலைவாய்ப்பு ரத்து – தேர்வு வாரியம் அறிவிப்பு!!
Exams Daily Mobile App Download
இந்த திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், வர இருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆந்திர மாநில அரசு ரேஷன் கார்டு தாரர்களுக்கு ஒரு கிலோ பருப்பு ரூ.67க்கும், அரை கிலோ சர்க்கரை ரூ.17க்கும் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. மேலும், கடந்த 3 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த மொபைல் ரேஷன் திட்டம் மீண்டும் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.