TNTRB 2331 உதவிப் பேராசிரியர்கள் வேலைவாய்ப்பு ரத்து – தேர்வு வாரியம் அறிவிப்பு!!
தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர்கள் பதவிக்கு 2,331 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை கடந்த 2019ம் ஆண்டு வெளியிட்டது. தற்போது இந்த வேலைவாய்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
உதவிப் பேராசிரியர்கள்
தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப நேர்முகத் தேர்வுக்கு பதிலாக தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 2019ம் ஆண்டு அரசு கலை/அறிவியல் கல்லூரிகள் /கல்வியியல் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர் பதவிக்கு இருக்கும் 2,331 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – வெளியான சூப்பர் நியூஸ்.. புத்தாண்டு பரிசும் இருக்கு!
Exams Daily Mobile App Download
தற்போது இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் உதவி பேராசிரியர் பதவிக்கு 4,000 பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது சம்மந்தப்பட்ட பத்திரிக்கைச் செய்தியை தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.