பிப்.28ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு, பள்ளி, கல்லூரிகள் மூடல் – மாநில அரசு உத்தரவு!

0
பிப்.28ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு, பள்ளி, கல்லூரிகள் மூடல் - மாநில அரசு உத்தரவு!
பிப்.28ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு, பள்ளி, கல்லூரிகள் மூடல் - மாநில அரசு உத்தரவு!
பிப்.28ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு, பள்ளி, கல்லூரிகள் மூடல் – மாநில அரசு உத்தரவு!

ஒடிசா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் தற்போது குறைந்துள்ளதால் அங்கு தற்போது புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் அனைத்தும் வரும் பிப்ரவரி 28ம் தேதி முதல் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வழிகாட்டுதல்கள்:

திங்கள் கிழமை நிலவரப்படி ஒடிசா மாநிலத்தில் புதிதாக 3,329 பேருக்கு கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை அன்று 4,843 ஆக இருந்தது. மேலும்,புதிதாக மாநிலத்தில் 18 பேர் நோய் தொற்று பாதிப்பால் உயிரியிழந்துள்ளனர். மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 8,612 ஆக உள்ளது. ஒடிசா அரசு நேற்று பிப்ரவரி மாதத்திற்கான கோவிட் -19 கட்டுப்பாடுகளை தளர்த்தியது. அதன்படி இரவு ஊரடங்கு உத்தரவை இரவு 9 மணி முதல் இருந்ததை ஒரு மணி நேரம் தளர்த்தி இரவு 10 மணி வரை நீட்டித்ததுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ஏனெனில் மாநிலத்தின் கோவிட் -19 பாதிப்பு விகிதம் முந்தைய நாளை விட 30 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது. இதனால் தான் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. சிறப்பு நிவாரண ஆணையர் (SRC) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பிப்ரவரி 1, 2022 முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை மாநிலத்தின் அனைத்து நகர்ப்புறங்களிலும் இரவு ஊரடங்கு தொடரும். பிப்ரவரி 28 வரை கட்டுப்பாடுகள் மாநிலம் முழுவதும் அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் ஒரு “toxic ஷோ”, கொந்தளித்த நடிகை கஸ்தூரி – வைரலாகும் பதிவு! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

புதிய உத்தரவின் படி, அனைத்து கடைகள், மால்கள், வணிக வளாகங்கள், சந்தைகள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு வளாகங்கள், திரையரங்குகள், ஆடிட்டோரியங்கள், சட்டசபை அரங்குகள் மற்றும் இதே போன்ற இடங்கள் மாநிலம் முழுவதும் தினமும் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். இரவு ஊரடங்கு உத்தரவின் போது, உணவு, மளிகை பொருட்கள், காய்கறிகள், முட்டை, மீன், இறைச்சி, பால் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை உணவகங்கள் மற்றும் Zomato மற்றும் Swiggy போன்ற வீட்டு விநியோகம் போன்ற சேவைகளுக்கு கட்டுப்பாடுகள் பொருந்தாது. ஆனால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்த அறிவிப்பை மாநில அரசு இன்னும் வெளியிடவில்லை என்று பொது சுகாதார இயக்குனர் நிரஞ்சன் மிஸ்ரா கூறினார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!