பிப்ரவரி 4 வரை 27 நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்த குஜராத்தில் 27 நகரங்களில் விதிக்கப்பட்டிருக்கும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிப்ரவரி 4ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
ஊரடங்கு நீட்டிப்பு
குஜராத் மாநிலத்தில் தற்போதுள்ள கொரோனா தொற்று நிலைமையை கண்காணித்த அரசு, இரவு ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாக முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் பூபேந்திர படேல் கூறுகையில், ‘குஜராத்தில் புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்தாலும், கடந்த 24 மணி நேரத்தில் 12,131 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 27 மாநிலங்களில் தற்போது அமலில் இருந்து வரும் இரவு நேர ஊரடங்கு பிப்ரவரி 4 வரை தொடரும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த வகையில் குஜராத்தில் வைரஸ் தொற்றின் திடீர் எழுச்சிக்குப் பிறகு, மாநில அரசு எட்டு முக்கிய நகரங்களை தவிர 19 நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவை அறிவித்தது. இந்த கட்டுப்பாடுகள் தினசரி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அமலில் இருந்து வரும் நிலையில், ஜனவரி 29 ஆம் தேதி முடிவடைய இருந்த இக்கட்டுப்பாடுகள் பிப்ரவரி 4 வரை நீட்டிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது பிப்ரவரி 4 வரை சில கூடுதல் செயல்பாடுகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து கடைசி நேரத்தில் விலகிய ஓவியா – ரசிகர்கள் அதிர்ச்சி!
அதாவது, இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் 27 மாவட்டங்களில் மட்டும் கடைகள், வணிக வளாகங்கள், மார்கெட்டிங் இடங்கள், சலூன்கள், ஸ்பாக்கள் மற்றும் அழகு நிலையங்கள் போன்றவை தினசரி இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். அதே வேளையில், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் இருந்து 24 மணி நேரமும் ஹோம் டெலிவரி சேவைகளுக்கு அனுமதிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.