தளர்வுகளுடன் கூடிய இரவு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
சண்டிகர் மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே ஜூன் 15 வரை அமலில் இருந்த இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இரவு 10.30 மணி முதல் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
நாடு முழுவதும் கொரோனா நோய் பரவல் சற்று குறைந்துள்ளது. அந்தந்த மாநிலங்களில் நிலையை கருத்தில் கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜூன் 13 ஆம் தேதி முதல் இரண்டு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.
செங்கல்பட்டில் ஜூன் 19ம் தேதி வரை மின்தடை – செயற்பொறியாளர் அறிவிப்பு!
தற்போது பொருளாதாரத்தை மீட்டெடுக்க தேவையான அனைத்து நடவடிக்கையையும் அரசு மேற்கொண்டுள்ளது. அதற்கான சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி பால், ரொட்டி, காய்கறி மற்றும் பழங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை இரவு 7 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து உணவகங்கள், பார்கள், ஜிம்கள், கிளப்புகள் மற்றும் ஸ்பாக்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய கல்வியாண்டு முதல் ஆங்கில வழியில் பட்டப்படிப்பு – முதல்வர் அறிவிப்பு!
ஏற்கனவே நகரில் இரவு ஊரடங்கு உத்தரவு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது அதில் 30 நிமிடங்கள் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு 10.30 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூன் 21 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பது பெரிதல்ல,கட்டுப்பாடுகளுடன் சுகாதாரமும் இருக்கணும், மாணவர்கள் கட்டுப்பாடுகள் கற்றுக்கொண்டால் போதும்,எல்லாம் நன்மைக்கே. நன்றி