அக்.30 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு, இரவு ஊரடங்கு நீக்கம் – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா நோய்த்தொற்று நிலவரத்தை கருத்தில் கொண்டு மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் வருகிற அக்டோபர் 10ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பண்டிகை தினங்களுக்கு இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட உள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் மாநில அரசுகள் சார்பில் ஊரடங்கு உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டது. இதில் பாதிப்பு நிலவரத்தை பொறுத்து தளர்வுகள் வழங்கப்படுகிறது. இம்மாதத்தில் பண்டிகை தினங்கள் அதிகளவில் வருவதால் கூடுதல் கவனம் செலுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. தற்போது மேற்குவங்க மாநில அரசு வருகிற அக்.30ம் தேதி வரை மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இருப்பினும், பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு இரவு ஊரடங்கு பத்து நாட்களுக்கு தளர்த்தப்பட்டுள்ளது.
சென்னை: கிடுகிடுவென உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை – இன்றைய (அக்.1) நிலவரம்!
அதன்படி அக்டோபர் 10 முதல் 20ம் தேதி வரை இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் மற்றும் வாகனங்களின் நடமாட்டம் தொடர்பான இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறது. முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பராமரித்தல் மற்றும் சுகாதார நெறிமுறையை எப்போதும் பின்பற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அக். 1 முதல் மெட்ரோ ரயில்கள் தவிர உள்ளூர் ரயில்கள் இயங்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த வழிகாட்டுதல்களை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை – கனமழை எதிரொலி!
மேலும் அனைத்து அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் பணியிடங்களின் உரிமையாளர்கள் /மேற்பார்வையாளர்கள், பணியிடங்களுக்கு வழக்கமான துப்புரவு, பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவது மற்றும் குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் பொருத்தமான விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டு உள்ளது. கொரோனா 3வது அச்சம் அதிகரித்து உள்ள நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தொடர்வதில் மாநில அரசுகள் உறுதியாக உள்ளன.