ஜன.15 முதல் முழு ஊரடங்கு அமல், பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மாநில முதல்வர் அசோக் கெலாட் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். அதன்படி, மாநிலத்தில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை, வார இறுதி மற்றும் இரவு ஊரடங்கு போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
கொரோனா வைரஸ் வழக்குகளின் அதிக பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருவதால் தொற்றுநோயைக் கட்டுக்குள் வைத்திருக்கும் முயற்சியில் ராஜஸ்தான் அரசு புதிய ஞாயிற்றுக்கிழமையான நேற்று புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதன்படி சனிக்கிழமை இரவு 11:00 மணி முதல் திங்கள்கிழமை காலை 5:00 மணி வரை மாநிலத்தில் வார இறுதி ஊரடங்கு உத்தரவை மாநில அரசு விதித்துள்ளது. மாநில அரசின் சமீபத்திய உத்தரவின்படி, அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு வார இறுதி ஊரடங்கு உத்தரவு விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்? பிரதமர் மோடி தீவிர ஆலோசனை!
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அரசு, ராஜஸ்தான் முழுவதும் ஏற்கனவே இரவு ஊரடங்கு உத்தரவு, தினமும் இரவு 11:00 மணி முதல் காலை 5:00 மணி வரை தொடரும் என்றும் கூறியுள்ளது. அரசு பல செயல்களுக்குமான வழிகாட்டுதகல்களையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, கல்வி நடவடிக்கைகள் தொடர்பான வழிகாட்டுதல்கள் உடனடியாக அமலுக்கு வரும் என்றும், வழிகாட்டுதலின் மற்ற அனைத்து விதிகளும் ஜனவரி 11 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் அனைத்து புதிய கட்டுப்பாடுகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய கோவிட் கட்டுப்பாடுகள்:
- அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் 12 ஆம் வகுப்பு வரையிலான கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 30 ஆம் தேதி வரை மூடப்படும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- மாநகராட்சி, நகராட்சி பகுதியில், திருமண விழாவில், 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
- அனைத்து வகையான நிகழ்வுகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் 100 பேர் மட்டுமே பங்கேற்க முடியும். ஆனால் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
- இறுதிச் சடங்கில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய தாமரைக்கு ஏற்பட்ட சோகம் – ரசிகர்கள் ஷாக்!
- மத வழிபாட்டுத்தலங்கள் காலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும்.
- உணவகங்கள் மற்றும் கிளப்புகள் இரவு 10:00 மணி வரை 50 சதவீத திறனுடன் திறக்கப்படும்.
- திரையரங்குகள், மல்டிபிளக்ஸ்கள் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும்.
- வணிக நிறுவனங்களை இரவு 8:00 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- ஜனவரி 31 ஆம் தேதிக்குள் தகுதியான நபர்கள் அனைவரும் கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெறுவதை அரசு கட்டாயமாக்கியுள்ளது.
- ஜனவரி 31 ஆம் தேதிக்குள் எந்தவொரு தனிநபருக்கும் முழுமையாக தடுப்பூசி போடப்படாவிட்டால், அவர்கள் பொது இடங்களில் நுழைய அனுமதி கிடையாது.
- அலுவலகங்கள். தனிமைப்படுத்தப்பட்ட மண்டலத்தின் அடிப்படையில் சுற்றுலா நடவடிக்கைகள், திரைப்பட படப்பிடிப்புகள் ஆகியவற்றையும் மாநில அரசு அனுமதித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்