விஜய் டிவியில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கும் “பாரதி கண்ணம்மா” ரோஷினி – ரசிகர்கள் உற்சாகம்!
“பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்த ரோஷினி தற்போது மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் ரீஎன்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்து உள்ளனர்.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியல் மக்கள் மனதை கவர்ந்த முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியல் 3 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் புதுமுக நடிகர்கள் வைத்து சீரியல் தொடங்கப்பட்டதால் அவ்வாறு வரவேற்பு இல்லாமல் சீரியல் சென்றது. ஆனால் பாரதி கதாபாத்திரத்தில் நடிக்கும் அருண் மற்றும் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினியின் எதார்த்தமாக நடிப்பால் சீரியல் முன்னணி சீரியல்களில் ஒன்றாக மாறியது.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய தாமரைக்கு ஏற்பட்ட சோகம் – ரசிகர்கள் ஷாக்!
இந்நிலையில் வெற்றிகரமாக சென்று கொண்டிருந்த இந்த சீரியலில் இருந்து திடீரென விலகுவதாக ரோஷினி அறிவித்தார். அதனால் சீரியலில் புதிதாக வினுஷா தேவி கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார். ரோஷினியின் திடீர் விலகலால் பாரதி கண்ணம்மா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது ரோஷினி ரசிகர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. அதன் படி விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி விரைவில் தொடங்க ப்ரோமோ வெளியானது.
தற்போது அந்த நிகழ்ச்சியில் ரோஷினி களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் அந்த நிகழ்ச்சியில் குக் ஆக சமையல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் ரோஷினி சின்னத்திரையில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்ததால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருந்தாலும் ரோஷினி மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கின்றனர்.