மே 31 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
கொரோனா 2 ஆம் அலை கட்டுப்பாடுகளாக அமலில் இருந்த முழு ஊரடங்கில் இருந்து, சில தளர்வுகளை அளித்து ஹரியானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. எதிர்பார்த்த அளவு கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததன் காரணமாக இத்தகைய தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்
கொரோனா 2 ஆம் அலை காரணமாக ஹரியானா மாநிலத்தில் மே மாதம் 3 ஆம் தேதி துவங்கி மே 10 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கு காரணமாக அம்மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டு வந்த புதிய பாதிப்புகளும், இறப்பு எண்ணிக்கையும் தற்போது வெகுவாக குறைந்து வந்தது. அதன் அடிப்படையில் மே முதல் வாரத்தில் 16 ஆயிரமாக பதிவு செய்யப்பட்டு வந்த ஒரு நாள் பாதிப்பானது, தற்போது 5 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் தீவிர முழு ஊரடங்கு அமல் – மாலை முக்கிய ஆலோசனை!!
அதன் காரணமாக ஹரியானாவில் நடைமுறையில் இருந்து வந்த ஊரடங்கில் இருந்து சில தளர்வுகள் அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அதன் படி சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை மே 31 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே மாதம் 24 ஆம் தேதி வரை நடைமுறையில் இருந்த முழு ஊரடங்கை, மே 31 வரை நீட்டிப்பதாக தலைமை செயலர் விஜய்வர்தன் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
இந்த ஊரடங்கு காலத்தில் தனித்து இயங்கும் கடைகள் அனைத்தும் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தவிர மற்ற கடைகள் அனைத்தும் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மால்கள் அனைத்தும் செயல்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தவிர திருமண நிகழ்வுகளில் 11 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.