தமிழகத்தில் இன்று முதல் தீவிர முழு ஊரடங்கு அமல் – மாலை முக்கிய ஆலோசனை!!
தமிழகத்தில் இன்று அனைத்துககட்சி எம்.எல்.ஏ.,கள் கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.
ஆலோசனை கூட்டம்:
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் தடுப்பு நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தார். மேலும் 14 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தினார். ஆனாலும் தொற்று பரவல் குறையாத காரணத்தினால் மேலும் 7 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டித்துள்ளர்.
அண்ணா பல்கலை மறுதேர்வு விண்ணப்ப பதிவு – இன்று முதல் தொடக்கம்!!
மேலும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள மாவட்டங்களுக்கு நேரில் சென்று பார்வையிடுகிறார். அனைத்து கட்சி உறுப்பினர்கள் அடங்கிய கொரோனா தடுப்பு பணிக்குழுவை அமைத்துள்ளார். இதன் மூலம் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு முயல்கிறது.
TN Job “FB Group” Join Now
தற்போது அதன் தொடர்ச்சியாக சென்னையில் அனைத்து எம்.பி, எம்.எல்.ஏ.,கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பணிகள் குறித்து கலந்தாலோசிக்க உள்ளனர். இந்த கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் இன்று மாலை 4 மணிக்கு 3 அமைச்சர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. சென்னை புறநகர் பகுதியார் சேர்ந்த 22 எம்.எல்.ஏ.,கள் கலந்து கொள்ளவுள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.