இரவு 11 மணிமுதல் காலை 5 மணிவரை மீண்டும் இரவு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
நாடு முழுவதும் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் கணிசமாக குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் பல தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதன் படி மேற்கு வங்க மாநிலத்தில் ஊரடங்கு தளர்வுகளை முதல்வர் அறிவித்துள்ளார்.
ஊரடங்கு தளர்வுகள்:
கொரோனா வைரஸால் நாடு முழுவதும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. உயிர் சேதங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் பொருளாதார ரீதியாக ஏகப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு அலைகளால் இரண்டு ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன் பின் கடந்த நவம்பர் மாதம் முதல் உருமாறிய கொரோனா வைரஸான ஓமிக்ரான் தாக்கத்தில் மூன்றாம் அலை தாக்கம் வேகமெடுக்க தொடங்கியது. அதனால் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடுமையான ஊரடங்கு கடந்த மாதம் அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக கொரோனா பரவல் தற்போது கணிசமாக குறைந்துள்ளது. அதனால் நேற்று (ஜன. 31) அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தார். அதில் பூங்காக்கள் மற்றும் சுற்றுலா இடங்களுக்கு செல்ல மக்களுக்கு கொரோனா வழிமுறைகளை பற்றி குறிப்பிட்டிருந்தார்.
8 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பிப்.3 முதல் பள்ளிகள் திறப்பு – முதல்வர் அறிவிப்பு!
மேலும், மாநில அரசு இரவு ஊரடங்கு நேரத்தை மாற்றியமைத்து இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை தொடர்ந்து அமுல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. உணவகங்கள், பார்கள் மற்றும் சினிமா அரங்குகள் 75% பயனாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் பிப்ரவரி 3ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.