ஜூலை 19 முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு – மாநில அரசு அறிவிப்பு!
கர்நாடகா மாநிலத்தில் வரும் ஜூலை மாதம் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற இருப்பதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் ஜூன் 30 ஆம் தேதி அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வுகள் அறிவிப்பு:
கொரோனா பரவலின் காரணமாக இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக காலவரையின்றி பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. பல மாநிலங்கள் பொதுத்தேர்வுகளை ரத்து செய்தது. கர்நாடகா மாநிலத்தில் வரும் ஜூலை மாதம் 19 மற்றும் 22 ஆம் தேதிகளில் 10 ஆம் தேர்வுகளை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. அந்த மாநிலத்தின் கல்வி அமைச்சர் சுரேஷ் குமார் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மதிப்பெண் கணக்கீடு தொடக்கம்!
மாணவர்களுக்கு பொதுத்தேர்விற்கான ஹால் டிக்கெட் அவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கு ஜூன் 30 ஆம் தேதி வழங்கப்பட்டு விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 19 ஆம் தேதி கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய தேர்வுகள் நடைபெறும் என்றும் ஜூலை 22 ஆம் தேதி மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு துவங்கும் என்றும் பிற்பகல் 1.30 மணிக்கு முடிந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 8 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த தேர்வுகளை எழுத இருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வருடம் மாநிலம் முழுவதும் உள்ள 48 ஆயிரம் தேர்வு மையங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆனால், இந்த ஆண்டு கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 78 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வுகள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.