நாகசைதன்யா மற்றும் ஸ்ருதிஹாசனுக்கு இடையே காதலா? சமூக வலைதளங்களில் பரவும் ஷாக் தகவல்!
தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தாவின் காதல் கணவர் நாக சைதன்யா சமந்தாவிற்கு முன் சுருதிஹாசனுடன் பழகி வந்தார் என தகவல் ஒன்று காட்டுத்தீ போல பரவி வருகிறது.
நடிகை சமந்தா:
வெள்ளித்திரையில் பல ஹிட் படங்களில் நடித்து டாப் நடிகைகளின் வரிசையில் இருப்பவர் நடிகை சமந்தா. அவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் எப்போதும் போல அவர் திரைப்படங்களில் நடித்து வந்தார். மேலும் திருமணத்திற்கு பின் தான் கூடுதல் கவர்ச்சியில் கவனம் செலுத்த தொடங்கினார். சமூக வலைத்தளங்களில் கணவன், மனைவி இருவரும் ஆக்டிவாக இருந்து வந்தனர்.
அர்ஜுன், ரோஜா குழந்தையை பார்க்கா விட்டால் பாட்டி உயிருக்கு ஆபத்து – அர்ஜுனின் கலாட்டா நாடகம்!
இந்நிலையில் சமந்தா சமூக வலைத்தளத்தில் இருந்து தனது கணவரின் குடும்ப பெயரான அக்கினேனி என்பதை நீக்கினார். அன்று முதல் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக பல சர்ச்சைகள் கிளம்பியது. அந்த வதந்திகளால் மனஉளைச்சலுக்கு சமந்தா தள்ளப்பட்டார். அதன் பின் இருவரும் உண்மையாவே விவாகரத்து செய்ய இருப்பதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். இருவரின் இந்த பதிவால் அவர்களது ரசிகர்கள் அதிர்ச்சி அடைய செய்தது.
விஜய் டிவி ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலுக்கு குவியும் எதிர்ப்பு – ப்ரோமோவை பார்த்து கொந்தளிப்பு!
விவாகரத்திற்கு பின் பல படங்களில் கமிட்டாகி சமந்தா பிசியாக இருக்கிறார். தற்போது மேலும் ஒரு செய்தி சமந்தா வாழ்க்கையில் விளையாடி வருகிறது. அதாவது நாக சைதன்யா டந்த 2016 ஆம் ஆண்டு பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை சுருதிஹாசனுடன் ஒன்றாக நடித்தார், அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு சில நாட்கள் இருவரும் டேட்டிங் செய்து வந்ததாக தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த செய்தியை கேட்டதும் விவாகரத்திற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என வதந்திகள் பரவி வருகிறது.