தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வினாடி வினா – பள்ளிகல்வித்துறை உத்தரவு!
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் சார்ந்து சிறப்பு வினாடி-வினாவை நடத்துமாறு தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
வினாடி வினா:
தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த 1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் வகையில் பாடங்கள் சார்ந்து சிறப்பு வினாடி நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழக கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இதில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் உயர்தர தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளின் கற்றல் விளைவுகளின் அடிப்படையில், வினாடி வினா நடத்த திட்டமிட்டுள்ளது. தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களில் 5 பல தெரிவு வினாக்களும், 5 இலக்கணம் மற்றும் மொழி அறிவு சார்ந்த வினாக்களும், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொரு பாடத்திலிருந்து 10 பல தெரிவு வினாக்களும் இடம் பெறும்.
அக்டோபர் 4 முதல் கல்லூரிகள் மீண்டும் திறப்பு – வழிகாட்டுதல்கள் வெளியீடு!
சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் உயர்தர தொழில்நுட்ப ஆய்வகத்தில் உள்ள கணினிகளின் எண்ணிக்கைக்கேற்ப ஒவ்வொரு குழுவினருக்கும், மாணவர் எமிஸ் லாகின் மற்றும் கடவுச்சீட்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி 1 மணி 30 நிமிடம் கால அவகாசம் அளித்து நடத்த வேண்டும். சனிக்கிழமையன்று முடிக்க இயலாத நிலையில் அடுத்து வரும் செவ்வாய் கிழமையன்றும் நடத்தி முடிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் வினாடி வினா போட்டிக்கான விடைகளை மாணவர்களிடம் கலந்துரையாட வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.