மாமியார் இறந்த சோகத்தில் பாட்டு பாடிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லட்சுமி அம்மாவை பார்க்க கண்ணன் வருவானா என்ற எதிர்பார்ப்புடன் கதைக்களம் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் படப்பிடிப்பிற்கு நடுவே நடிகை ஹேமாவும், ஜெகாவாக நடிக்கும் நடிகர் டேவிட்டும் இணைந்து அருமையான பாடல் ஒன்றை பாடி உள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல், மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற சீரியலாக உள்ளது. மக்கள் குடும்பத்துடன் இணைந்து பார்க்கும் அளவு நல்ல கதை இருக்கிறது. கூட்டு குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதையுடன், கடைசி தம்பியின் காதலால் குடும்பத்தில் ஏற்படும் சோகத்தை பற்றி இந்த சீரியல் சொல்கிறது. கடைசி பையனை நினைத்து கவலைப்பட்டு லட்சுமி அம்மா இறக்க, இறந்த விஷயம் கூட தெரியாமல் கண்ணன் வெளியூர் சென்று இருக்கிறார்.
அஞ்சலி வளைகாப்பு முதல் கண்ணம்மா இரட்டை குழந்தை வரை – NO.1 சீரியலான “பாரதி கண்ணம்மா”!
அம்மாவிற்கு அண்ணன்கள் இறுதி சடங்கு செய்வது எல்லாம் நிஜத்தையே மிஞ்சுவது போல உள்ளது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க சீரியலில் மீனவாக நடிக்கும் ஹேமாவும், ஜெகாவாக நடிக்கும் டேவிட் என இருவரும் இணைந்து படபிடிப்பு தள இடைவெளியில் ஒரு பாடல் ஒன்றை கரோகி உடன் சேர்ந்து பாடி உள்ளனர். இருவரும் இந்த பாடலை மிகவும் அருமையாக பாடியுள்ளனர். ஹேமாவின் குரல் மிகவும் அருமையாக இருக்கிறது.
கோலாகலமாக நடைபெற்ற நடிகை வித்யுலேகா ராமன் திருமணம் – ரசிகர்கள் வாழ்த்து!!
இந்நிலையில் இந்த பாடல் பாடிய வீடியோவை ஹேமா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தென்றல் வந்து என்னை தீண்ட பாடலில் ஒரு வரியை கேப்சனாக கொடுத்திருக்கிறார். மேலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவருடன் இணைந்து பாடிய ஜெகாவும் அருமையாக பாடியதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர். மேலும் மாமியார் இறந்த சோகம் இல்லாமல் பாட்டு பாடிட்டு இருக்கீங்க என ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.