அக்டோபர் 4 முதல் கல்லூரிகள் மீண்டும் திறப்பு – வழிகாட்டுதல்கள் வெளியீடு!
கொரோனா நோய்த்தொற்று நிலவரத்தை கருத்தில் கொண்டு அக்டோபர் 4ம் தேதி முதல் கல்லூரிகளை திறக்க மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. தற்போது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.
கல்லூரிகள் திறப்பு:
கேரள கல்லூரிகள் அக்டோபர் 4 முதல் மீண்டும் திறக்கப்படும். இறுதி செமஸ்டர் இளங்கலை மற்றும் முதுகலை, யுஜி, பிஜி மாணவர்களுக்காக இந்த உயர் கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் வருகைப்பதிவு கட்டாயமில்லை. அனைத்து கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றி கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும். செப்டம்பர் 7ம் தேதி முதல்வர் பினராயி விஜயன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். 50% திறனுடன் வகுப்புகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
எமிரேட்ஸ் நிறுவனத்தில் 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்ப்பு!
அதன்படி பிஜி மாணவர்களின் வருகை 100%, யுஜி மாணவர்களின் வருகை 50% அனுமதிக்கப்படுகிறது. மேலும் உயர்கல்வித் துறை கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய பொதுவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அனைத்து வகுப்பறைகள், நூலகங்கள் மற்றும் ஆய்வகங்கள் நன்கு சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கல்வி நிறுவனங்கள் இதை செயல்படுத்த சில உதவிகளை விரும்பினால், அவர்கள் உள்ளூர் அரசு அமைப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியை பெறலாம்.
தமிழகத்தில் எலி மருந்து, பால்டாயில் விற்பனைக்கு கட்டுப்பாடு – தற்கொலை தடுப்பு நடவடிக்கை தீவிரம்!
இதில் மற்ற வழிகாட்டுதல்களுக்கிடையில், போதுமான முகக்கவசங்கள் மற்றும் கை கழுவும் வசதிகள் உள்ளன என்பதையும் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும், முன்னுரிமை அடிப்படையில் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். ஏனென்றால், வளாகத்திற்கு வரும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரின் பாதுகாப்பிற்காக குறைந்தபட்சம் ஒரு டோஸ் கோவிட் -19 தடுப்பூசி போடப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.