தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத்துறை தகவல்!

0
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்துத்துறை தகவல்!
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்துத்துறை தகவல்!
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத்துறை தகவல்!

தமிழகத்தில் நாளை விநாயகர் சதுர்த்தி தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் நாளை அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி தின விழா நாளை (ஆகஸ்ட் 31) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அத்துடன் பொது மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில் நாளை அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு இன்று மாலை முதல் செல்ல தொடங்குவார்கள். அதனால் பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் அலைமோதும். ஆதலால் பயணிகளின் தேவைகளுக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். மேலும், சென்னையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் நிரம்பியுள்ளது.

தமிழகத்தில் கோவில் கட்டுமான பணிகளுக்கான அறிவிப்பு – அமைச்சர் விளக்கம்!

அதனால் பொதுமக்களின் நலன் கருதி இன்று முதல் தமிழகத்தில் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக போக்குவரத்து கழகம் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி, திருச்சி, ஓசூர், பெங்களூர், கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்களின் தேவைக்காக சென்னையில் இருந்து கூடுதலான பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் இது தொடர்பாக போக்குவரத்துத்துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் இருந்து அனைத்து ஊர்களுக்கும் இன்று 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் பயணிகள் முன்பதிவு செய்தும் பயணம் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயணிகள் திரும்பி வருவதற்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!