TNPSC குரூப் 4 எழுதுபவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து துறை அறிவிப்பு!
தமிழகத்தில் 24ம் தேதி (நாளை) குரூப் 4 தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து தகவல்களை இப்பதில் காண்போம்.
சிறப்பு பேருந்து:
தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக அரசு எந்த ஒரு போட்டி தேர்வுகளை நடத்த அனுமதி அளிக்காமல் இருந்தது. பிறகு தமிழக அரசின் கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி செலுத்தியதன் காரணமாக கொரோனா பரவல் குறைய தொடங்கியது. இந்த நிலையில் தமிழக அரசு போட்டி தேர்வுகளை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில் வருகிற 24 ம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. மேலும் இந்த தேர்விற்கு மார்ச் 30 முதல் ஏப்ரல் 28 தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வந்த நிலையில் மொத்தம் 21,83,225 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
Exams Daily Mobile App Download
கடந்த 2019 ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 5 லட்சம் பேர் அதிகமாக விண்ணப்பித்துள்ளதாக தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது. மேலும் குரூப் 4 தேர்வு குறித்து தேர்வர்களுக்கு சில முக்கிய திருத்தங்களை தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி தேர்வர்கள் செயல்பட வேண்டும் என்றும் இல்லையென்றால் தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு அறையில் அளிக்கப்படும் OMR தாள்களிலும் சில புதிய மாற்றங்களை தேர்வு வாரியம் கொண்டு வந்துள்ளது.
நம்பிக்கை துரோகம் செய்த ராதிகா, கேள்வி கேட்ட பாக்கியா – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வருபவை!
மேலும் தேர்வர்கள் சரியாக 8.30 க்குள் தேர்வு மையத்திற்குள் வரவேண்டும் என்றும் 9 மணிக்கு மேல் வருபவர்கள் தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குரூப் 4 தேர்வு எழுதும் தேர்வர்கள் சரியான நேரத்திற்கு தேர்வு மையத்திற்கு செல்லும் விதமாக தமிழக போக்குவரத்து துறையானது சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. தேர்வு மையங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகள் தேவையான அளவில் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது கிராமங்களில் இருந்து வருபவர்களுக்கும் தொலைதூரத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டவர்களுக்கும் இது மிகவும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.