நம்பிக்கை துரோகம் செய்த ராதிகா, கேள்வி கேட்ட பாக்கியா – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் கோபி ஏமாற்றியது தாங்க முடியாமல் பாக்கியா வீட்டை விட்டு வெளியேறுகிறார். இந்நிலையில் ராதிகாவிடம் நியாயம் கேட்க பாக்கியா அவருடைய வீட்டிற்கு செல்கிறார். அப்போது ராதிகா மன்னிப்பு கேட்க பாக்கியா பேசியது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ராதிகாவின் உறவை பற்றி பாக்கியாவிற்கு உண்மை எல்லாம் தெரிந்துவிடுகிறது. அதனால் மனம் உடைந்த அவர் குடும்பத்தினர் முன்னிலையில் பல கேள்விகளை கேட்கிறார். அதனால் கோபி மிகவும் வருத்தப்படுகிறார். பாக்கியா கோபியிடம் விவாகரத்து பற்றி கேட்க அந்த நேரம் கோர்ட்டில் இருந்து நோட்டீஸ் வருகிறது. அதை பார்த்த பாக்கியா இனிமேல் உங்களுடன் வாழ மாட்டேன் என சொல்லி வீட்டை விட்டு வெளியேறி செல்கிறார்.
Exams Daily Mobile App Download
மறுபக்கம் இனியாவும் ஈஸ்வரியும் பாக்கியா இல்லாமல் மிகுந்த வேதனையில் இருக்கின்றனர். இனியா சென்று பாக்கியாவை கூப்பிட ஆனால் பாக்கியா வரமாட்டேன் என சொல்கிறார். அடுத்து ஈஸ்வரி சென்று பாக்கியாவை கூப்பிட அவர் பேச்சையும் கேட்காமல் தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறார். இன்றைய எபிசோடில் ராதிகாவிடம் நியாயத்தை கேட்க பாக்கியா ராதிகா வீட்டிற்கு செல்கிறார். அங்கே மருத்துவமனையில் நடந்ததை பற்றி சொல்ல, ராதிகா அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.
Work From Home ல் வேலை பார்க்கும் ஊழியர்கள் கவனத்திற்கு – புதிய விதிகள் அறிவிப்பு!
நான் தெரிந்தே அதை செய்யவில்லை என ராதிகா குற்ற உணர்ச்சியில் அழுகிறார். ஆனால் உங்களுக்கு முன்னால் தெரியாமல் இருக்கலாம் ஆனால் தெரிந்த பின் ஏன் என்னிடம் சொல்லவில்லை என கேட்க ராதிகாவால் பதில் சொல்ல முடியவில்லை. உங்களை நம்பி நீங்க நன்றாக இருக்க வேண்டும் என நினைத்தேன் ஆனால் நீங்க என் வாழ்க்கையை கெடுத்துவிட்டீர்கள் என பாக்கியா ராதிகாவை சரமாரி கேள்விகளாக கேட்கிறார். ராதிகா பதில் சொல்ல முடியாமல் இருக்கிறார்.