நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கம் – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என புதுச்சேரி அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த பேருந்துகள் காரைக்காலில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகள்
தமிழகத்தில் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி திருக்கல்யாணம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதை தொடர்ந்து அடுத்து வரும் நாட்களில் தேரோட்ட நிகழ்வு நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வை காண தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான மக்கள் வருகை தருவது வழக்கம். இதனை கருத்தில் கொண்டு பக்தர்களின் வசதிக்காக அரசாங்கம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – விவரங்கள் இதோ!!
Follow our Instagram for more Latest Updates
அந்த வகையில் நாளை முதல் அடுத்து வரும் 3 நாட்களுக்கு, திருத்தணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே போல, தைப்பூசத்தை முன்னிட்டு நாளை (பிப்ரவரி 4) காரைக்காலில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா அறிவித்துள்ளார்.