தமிழகத்தில் புதன்கிழமை வரை 8,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத்துறை அறிவிப்பு!!

0

தமிழகத்தில் புதன்கிழமை வரை 8,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத்துறை அறிவிப்பு!!

தமிழகத்தில் விடுமுறை முடிவடைந்து மீண்டும் பணிக்கு திரும்பும் பயணிகளுக்காக புதன்கிழமை வரை 8,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பேருந்து:

தமிழகத்தில் ஆயுதப்பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பயணிகள் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர். இதனால், பயணிகளின் வசதிக்காக தமிழகம் முழுவதும் 15000 சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், சென்னையில் இருந்து மட்டுமே வெளியூர்களுக்கு 8,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனாலும், பயணிகள் போதுமான பேருந்து கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது? அறிவிப்பு வெளியீடு!!

இந்நிலையில், ஆயுதபூஜை விடுமுறை முடிவடைந்து மீண்டும் பணிக்கு திரும்பும் பயணிகளுக்காக புதன்கிழமை வரையிலும் 8000 சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது போக, பயணிகளுக்கு கூடுதல் பேருந்துகள் தேவைப்படும் பட்சத்தில் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!