தொடர் விடுமுறையொட்டி கொடைக்கானலில் குவிந்த பயணிகள் – அலைமோதும் கூட்டம்!!

0

தொடர் விடுமுறையொட்டி கொடைக்கானலில் குவிந்த பயணிகள் – அலைமோதும் கூட்டம்!!

ஆயுதப்பூஜையை முன்னிட்டு 4 நாட்கள் விடுமுறை என்பதால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி கொண்டிருக்கிறது.

கொடைக்கானல்:

தமிழகத்தில் ஆயுதபூஜையை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலானோர் குடும்பத்துடன் சுற்றுலா பகுதிகளுக்கு சென்று விடுமுறை நாளை செலவிட்டு வருகின்றனர். இதனால், இன்று கொடைக்கானலில் வழக்கத்திற்கும் அதிகமாக சுற்றுலா பயணிகள் வந்துள்ளதால் கடும் கூட்டம் நிலவி வருகிறது. அதிலும், குறிப்பாக மோயர் சதுக்கம், பைன் மர சோலை, பில்லர் ராக், குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் கூட்டம் அலைமோதி கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் புதன்கிழமை வரை 8,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத்துறை அறிவிப்பு!!

இதனால், சுற்றுலா வந்துள்ள பயணிகளின் வாகனங்கள் வரிசையாக 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு பார்க் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிகளவிலான சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைவில் செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சுற்றுலா தளங்களை கண்டுவிட்டு திரும்பும் வானங்களை வேறு வழியில் போலீசார் மாற்றி வருகின்றனர். மேலும், புயலின் காரணமாக கொடைக்கானலில் லேசான மழை பொழிவதாகவும், காலநிலை குளிராக இருப்பதாகவும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!