மூத்த குடிமக்களுக்கான ரூ.10,000 உதவித்திட்டத்துடன் சிறப்பு மசோதா – மத்திய அரசு முடிவு!
அரசு, வங்கித்துறை என பல துறைகளும் மூத்த குடிமக்களுக்கு என பல நலத்திட்ட உதவிகள் உட்பட சில கூடுதல் சலுகைகளையும் அளித்து வருகிறது. இந்நிலையில் வயது முதிர்ந்தவர்களுக்காக மத்திய அரசு ஒரு புதிய மசோதாவை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதிய அறிவிப்பு:
ஒவ்வொரு குடும்பத்தில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்காக சில நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதோடு, வயதான பெற்றோர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்காக ஒரு புதிய விதியை அமல்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலன் மசோதா குறித்து மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்ளும் மழைக்கால கூட்டத்தொடரில் முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட சம்பள உயர்வு – அமைச்சர் தகவல்!
அதாவது இந்த மசோதாவின் நோக்கம் வயதானவர்கள், பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் சேர்ப்பதை தவிர்க்க அரசு முன்னெடுத்துள்ள ஒரு முக்கியமான நடவடிக்கையாகும். இந்த வயது மூத்தவர்களுக்கான சிறப்பு மசோதா நெடு நாட்களாக மத்திய அரசின் நிகழ்ச்சி நிரலில் இருந்து வருகிறது. அதனை மீண்டுமாக அமல்படுத்த அரசு ஆலோசித்துள்ளது. அதாவது மூத்த குடிமக்களின் பராமரிப்பு, தேவைகள், பாதுகாப்பு, குழந்தைகள், பேரக்குழந்தைகள், தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் ஆகியோருக்கான பாதுகாப்பு உள்ளிட்ட சிறப்பு அம்சங்களும் இந்த மசோதாவில் அடங்கும்.
TN Job “FB Group” Join Now
தற்போது சில மாற்றங்களை உள்ளடக்கிய இந்த மசோதா அதிகாரப்பூர்வமாக பாராளுமன்றத்தில் அமல்படுத்தப்படுவதற்கு முன்னாக, தற்போது நடைபெற இருக்கும் மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்படுமானால் வீடுகளில் இருக்கும் வயது மூத்தவர்களை கண்காணிக்க மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் எனவும் ஒவ்வொரு குடும்பத்தின் வருமானத்தை பொறுத்து இக்கட்டணம் இறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.