தமிழகத்தில் ரயில்வே துறையில் வேலை – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
Electrician பணியிடங்களை நிரப்ப தெற்கு ரயில்வே (ஈரோடு) துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த ரயில்வே பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 22.03.2022 உடன் முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழகத்தில் ரயில்வே துறை வேலைவாய்ப்பு விவரங்கள் :
- தெற்கு ரயில்வே அறிவிப்பின்படி, Electrician பணிக்கு ஆள் நிரப்புவதற்காக மொத்தமாக 13 காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
- மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் கட்டாயம் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பித்தல் போதுமானதாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- Electrician பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.6,000/- முதல் ரூ.7,000/- வரை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.