தமிழக அரசு பணிகளில் சமூக நீதிக்கொள்கை – சட்ட வல்லுநர் குழு அமைப்பு! அரசு உத்தரவு!
தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது அனைத்து பணிகளிலும் சமூக நீதி கொள்கைகளை செயல்படுத்தபடுத்துவதற்கான சட்டத்தை இயற்ற குழு அமைக்கப்பட்டுள்ளது.
சமூக நீதிக் கொள்கை:
தமிழகத்தின் அனைத்து துறைகளும் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நிர்வாக முறைகள் மற்றும் துறை அதிகாரிகள் தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அத்துடன் பல புதிய திட்டங்களும் வடிவமைக்கப்பட்டு அவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழக அரசு துறை பணிகளில் சமூக நீதி கொள்கைகள் செயல்படுத்துவதற்கு சட்டம் இயற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இது குறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில், அரசுப் பணிகளில் சமூக நீதி கொள்கைகளை செயல்படுத்த உரிய சட்டத்தை இயற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் முதல் கட்டமாக நிர்வாக சட்ட நிபுணர்களையும், மூத்த வழக்கறிஞர்களையும் கொண்ட வல்லுநர் குழுவை அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒரே நாளில் தடாலடியாக சரிந்த தங்கத்தின் விலை.. மக்களே.. இது தான் நல்ல சான்ஸ் – மிஸ் பண்ணிடாதீங்க!
Exams Daily Mobile App Download
இந்த உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட குழுவில் உச்சநீதிமன்றத்தின் மாநில அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி மற்றும் வழக்கறிஞர் என் ஆர் இளங்கோ, அருள்மொழி, லட்சுமி நாராயணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.