தமிழகத்தில் 1 – 5ம் வகுப்பு மாணவர்களுக்கான சிற்றுண்டி திட்டம் – புதிய வழிமுறைகள் வெளியீடு!
தமிழக அரசுப் பள்ளிகளில் 1 – 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று செயல்படுத்தப்பட உள்ளது. தற்போது இத்திட்டம் குறித்த வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
காலை உணவு:
தமிழகத்தில் அரசு மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரி செய்யும் பொருட்டு எண்ணும் எழுத்தும், ரீடிங் மாரத்தான், இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து அரசு பள்ளிகளில் பயிலும் 1 – 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் நோக்கில் காலை சிற்றுண்டி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இத்திட்டம் மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.
சுமார் 1,14,095 மாணவ, மாணவியர்கள் இதன் மூலம் பயனடைய உள்ளனர். இத்திட்டத்தில் மாணவர்களுக்கு அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா, சாம்பார் ஆகியவையும் – ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி போன்ற உணவுகள் காலை நேரம் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!
Exams Daily Mobile App Download
விதிமுறைகள்:
- அதில் காலை உணவு திட்டத்தை பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் சுழற்சி முறையில் மேற்பார்வையிட வேண்டும்.
- தரமான மற்றும் சுகாதாரமான உணவை போதுமான அளவுக்கு மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
- காலை உணவு திட்டத்தில் அரசால் பரிந்துரைக்கப்பட்ட உணவு பட்டியலின் படி உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
- பள்ளி ஆசிரியர்களும், மேலாண்மை குழு உறுப்பினர்களும் சுழற்சி முறையில் உணவை சுவைத்து, தரத்தை அறிய வேண்டும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்