தமிழகத்தில் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – தேசிய திறனாய்வு தேர்வு விடைக்குறிப்பு!
இந்தியாவில் பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க வேண்டும் என்று அரசு கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறது. இதற்காக தேசிய திறனாய்வுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. இத்தேர்வுக்கு தற்போது தற்காலிக விடைக்குறிப்பு வெளியிட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தேசிய திறனாய்வுத் தேர்வு:
நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை கைவிட வேண்டும் என்று அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகிறது. கொரோனா பரவலுக்கு பிறகு இது மேலும் அதிகரித்து உள்ளதாக ஆய்வுகளின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் இதனை தடுக்கம் வகையில் மாணவர்கள் உயர்கல்வி கற்க உதவியாக இருக்கவும் மற்றும் மேல்நிலைக் கல்வியை பெறுவதற்காகவும் மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பிப்ரவரி 15ம் தேதிக்கு பின்னர் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் ஆலோசனை!
இதன் மூலம் 1 லட்சம் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதன்படி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு வரை மாதந்தோறும் 1000 ரூபாய் கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் 2000 ஆயிரம் ரூபாய் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்தேர்வினை அரசு பள்ளி / அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் எழுதலாம். தற்போது இந்த தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பிப்ரவரி 15ம் தேதிக்கு பின்னர் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் ஆலோசனை!
இதில் தெரிவித்தாவது, தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பெற விரும்பும் மாணவர்கள் http://http//dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம். அத்துடன் இதில் ஏதேனும் மாற்றுக் கருத்துகள் இருந்தால் தகுந்த ஆதாரத்துடன் தெரிவிக்கலாம். இதனை வருகிற 16ம் தேதிக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளது. அத்துடன் தேர்வர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது