தமிழகத்தில் பிப்ரவரி 15ம் தேதிக்கு பின்னர் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் ஆலோசனை!
தமிழகத்தில் ஜனவரி கடைசி வாரத்தில் இருந்து இரவு ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகளுக்கு தடை விதித்து முதல்வர் உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் வரும் 14ம் தேதி ஊரடங்கு கூடுதல் தளர்வு குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
முதல்வர் ஆலோசனை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தை தொடர்ந்து, புதிய வகை வைரஸ் ஓமைக்ரான் பரவ தொடங்கின. இதனால் பொதுமக்கள் அதிக அச்சத்திற்கு ஆளானார்கள். மேலும் மீண்டும் கொரோனா வேகமெடுத்து மூன்றாம் அலையின் துவக்கமாக ஜனவரி 2வது வாரத்தில் பரவின. இந்த வகையில் பொதுமக்கள் பாதுகாப்புக்காக தமிழக அரசு மீண்டும் இரவு ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு என கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியது. மேலும் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது.
பிப்.20 முதல் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
இந்த நிலையில் தமிழகத்தில் தினசரி தொற்று குறைந்து வருவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகளில் அதிக தளர்வு அளித்து முதல்வர் உத்தரவிட்டார். இந்த தளர்வு பிப் 1 முதல் 15 வரை அமலில் இருக்கும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது. இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நீக்கப்பட்டது. அனைத்து தினங்களிலும் வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிப் 1 முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் கொரோனா ஊரடங்கால் 23 லட்சம் பேர் வேலையிழப்பு – மத்திய அரசு தகவல்!
மேலும் தமிழகத்தில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று கணிசமாக குறைந்துள்ளது. நேற்று ஒருநாள் பாதிப்பு 4 ஆயிரத்துக்கும் கீழ் சென்றது.தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளில் அளிக்கப்பட்ட தளர்வு வரும் 15 தேதியுடன் முடிவடைய உள்ளதால் கூடுதல் தளர்வுகள் விதிப்பது தொடர்பாக வரும் 14 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மருத்துவத்துறை நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நர்சரி பள்ளிகள் திறக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகுமா? மற்றும் ஊரடங்கில் வேறு எதுவும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக இந்த ஆலோசனை நடத்தப்பட உள்ளதா? என மக்களிடையே எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.