பிப்.20 முதல் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
திரிபுரா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அம்மாநிலத்தில் இன்று முதல் 20 ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு:
இந்தியாவில் கொரோனா வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த புதிய வகை ஓமிக்ரான் வைரஸ் தொற்று தீவிரமாக பரவி கொரோனா மூன்றாம் அலை பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலுக்கு இணங்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழிகாட்டி வருகிறது. அதன்படி மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கடும் கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கை விதித்து வருகிறது. தற்போது பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்தியாவில் கொரோனா ஊரடங்கால் 23 லட்சம் பேர் வேலையிழப்பு – மத்திய அரசு தகவல்!
அதனை தொடர்ந்து தற்போது திரிபுரா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அம்மாநிலத்தில் இன்று முதல் 20 ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்படும் பொது மக்கள் தேவையற்ற காரணங்களுக்கு வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உணவகங்கள், திரையரங்கில், அழகு நிலையங்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு அரங்குகள், மற்றும் பொழுதுபோக்கு பூங்கா, உள்ளிட்ட இடங்களுக்கு 50 % பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் & அகவிலைப்படி உயர்வு – வெளியான சூப்பர் அறிவிப்பு!
மேலும் பொது பொது மக்கள் அனைத்து பொது இடங்களிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். அரசின் கொரோனா தடுப்பு பணிகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தென்னாப்பிரிக்காவில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாக தகவல் வந்துள்ளது. இந்த வைரஸ் மிகவும் அபாயகரமானது என்று உலக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. அதனால் இனி வரும் நாட்களில் பாதிப்புகள் அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.