10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – அக்.24 தேசிய திறனாய்வு தேர்வு!
இந்தியாவில் அக்டோபர் 24 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு நடைபெறும் என்று என்சிஇஆர்டி தெரிவித்துள்ளது.
தேசிய திறனாய்வுத் தேர்வு:
இந்தியாவில் அனைத்து மாணவர்களும் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வறுமையின் காரணமாக கல்வி பாதிப்படைய கூடாது என்பதற்காக அரசு இலவச கல்வியை அளித்து வருகிறது. மேலும் கற்றலில் திறமையுள்ள மாணவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக கல்வி உதவித்தொகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தியாவில் ஆண்டுதோறும் தேசிய அளவில் திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே நடைபெறுகிறது.
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு DA கிராஜூட்டியுடன் ரொக்கப்பணம் – அரசு உத்தரவு!
10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் சிறந்த மாணவர்களை தேர்வு செய்து அவர்களின் மேற்படிப்புக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நோக்கில் தேசிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது. என்சிஇஆர்டி நடத்தும் இந்த தேர்வானது 2 நிலைகளை கொண்டது. நடப்பு ஆண்டு அக்டோபர் 24ம் தேதி நாடு முழுவதும் தேசிய திறனாய்வுத் தேர்வு நடைபெறவுள்ளது. இரண்டு கட்ட தேர்வுகளும் 100 மதிப்பெண்களுக்கு 2 மணிநேரம் நடைபெறும். முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் மட்டுமே அடுத்தகட்ட தேர்வை எழுத முடியும்.
தமிழகத்தில் விளையாட்டு போட்டிகளை நடத்த அரசு அனுமதி – உத்தரவு பிறப்பிப்பு!
இந்த தேர்வுக்கான அனுமதி சீட்டை அக்டோபர் 8 முதல் மாணவர்கள் இணையம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று என்சிஇஆர்டி தெரிவித்துள்ளது. இந்த திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 11, 12ம் வகுப்பு பயிலும் போது 1,250 ரூபாய் உதவித்தொகையும், உயர் கல்வியின் போது மாதம் ரூ.2,000 உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. மேலும் யுஜிசி விதிமுறைகளின்படி பி.எச்டி படிப்பு வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.