மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு DA கிராஜூட்டியுடன் ரொக்கப்பணம் – அரசு உத்தரவு!

0
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு DA கிராஜூட்டியுடன் ரொக்கப்பணம் - அரசு உத்தரவு!
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு DA கிராஜூட்டியுடன் ரொக்கப்பணம் - அரசு உத்தரவு!
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு DA கிராஜூட்டியுடன் ரொக்கப்பணம் – அரசு உத்தரவு!

மத்திய நிதி அமைச்சகத்தின் செலவுத்துறை, ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு உதவித்தொகை (DA) சலுகைகளுடன் ரொக்கப்பணம் மற்றும் கிராஜூட்டி வழங்க அனுமதி அளித்து 7 ஆவது ஊதியக்குழு அடிப்படையில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு உத்தரவு

மத்திய அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் அகவிலைப்படி (DA) தொகையானது 11% உயர்த்தப்பட்டு ஜூன் மாத தவணையுடன் வழங்கப்பட இருக்கிறது. இந்த அறிவிப்புகள் வெளியான ஒரு சில வாரங்களில் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் சுமார் 3% அகவிலைப்படி தொகையை அளிக்க மத்திய அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது தவிர அரசு ஊழியர்களின் வீட்டுப்படி, இழப்பீடு போன்றவற்றையும் அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு உதவித்தொகை (DA) சலுகைகளுடன் ரொக்கப்பணம் மற்றும் கிராஜூட்டி வழங்க அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் விளையாட்டு போட்டிகளை நடத்த அரசு அனுமதி – உத்தரவு பிறப்பிப்பு!

அந்த வகையில் ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான காலப்பகுதிகளின் பணிக்கொடை குறித்த விவரங்களை அமைச்சகம் வெளியிட உள்ளது. அதன்படி, 2020 ஜனவரி 1 முதல் ஜூன் 30, 2021க்குள் ஓய்வு பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு கிராஜூட்டி வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மத்திய நிதி அமைச்சகம், 7 செப்டம்பர் 2021 அன்று ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு கிராஜுட்டி மற்றும் பணம் வழங்குவது தொடர்பான ஒரு குறிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!

இது தொடர்பான அறிக்கையில், ‘ஒரு முறை ஓய்வூதிய நன்மைகளின் படி, ஓய்வூதியத்திற்கு பதிலாக பணிக்கொடை மற்றும் ரொக்கப் பணம் செலுத்துதல் ஆகியவை ஓய்வூதியத்தில் அனுமதிக்கப்படும். மேலும் 01.01.2020 முதல் 30.06.2021 வரையிலான காலத்தில் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு அனுமதிக்கப்பட்டதை விட 23.04.2020 மற்றும் 20.07.2021 காலங்களில் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு குறைவான தொகை கொடுக்கப்படும்’ என அனுதாபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையுள்ள காலத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு பொருந்தும்.

இருப்பினும், குறிப்பிட்ட கால இடைவெளியில் மூன்று DA தொகை திருத்தப்பட்டுள்ளதால், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் DA தொகை அதற்கேற்ப மாறுபடும். உதாரணமாக, 1 ஜனவரி 2020 முதல் 31 ஜூன் 2020 வரை ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு, 21% விகிதத்தில் (17% + 4%) DA வழங்கப்படும். ஆனால் 1 ஜூலை 2020 முதல் 31 டிசம்பர் 2020 வரை ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 24% விகிதத்தில் DA கிடைக்கும் (17% + 4% + 3%). அதே நேரத்தில் 1 ஜனவரி 2021 முதல் 30 ஜனவரி 2021 வரை ஓய்வு பெறுபவர்கள் 28% விகிதத்தில் DA தொகையை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!