தமிழகத்தில் விளையாட்டு போட்டிகளை நடத்த அரசு அனுமதி – உத்தரவு பிறப்பிப்பு!
தமிழகத்தில் அரசின் நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி விளையாட்டு அரங்கங்களில் விளையாட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
விளையாட்டு போட்டி:
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பரவிய கொரோனா இரண்டாம் அலை அச்சத்தால் அரசு கடந்த மே மாதம் முதல் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. இதனால் கடைகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் விற்கப்படும் கடைகளுக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. மேலும் மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது.
தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!
மற்ற தடைகளை தொடர்ந்து கொரோனாவால் விளையாட்டு போட்டிகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. விளையாட்டு அரங்கத்தில் வீரர்கள் கூடவும், பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது அரசு ஊரங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒருவரை ஒருவர் தொடாமல் விளையாடும் விளையாட்டுக்கான போட்டிகளை நடத்துவதற்கு விளையாட்டு பயிற்சி அகாடமிகளுக்கு அரசு அனுமதி வழங்கியது.
GATE 2022 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் – ஐஐடி காரக்பூர் அறிவிப்பு!
அதனை தொடர்ந்து தற்போது தொடாமல் விளையாடும் விளையாட்டிற்கான போட்டிகளை திறந்த வெளியில் நடத்த அனுமதியை அளிக்கலாம் என்று அரசுக்கு பேரிடர் மேலாண்மை இயக்குனர் கடிதம் எழுதியுள்ளார். விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திலோ அல்லது மற்ற அரங்கத்திலோ போட்டிகளை நடத்தலாம் என்று தெரிவித்துள்ளார். இதன் பேரில் அரசு விளையாட்டு போட்டிகளை அவர் குறிப்பிட்ட விளையாட்டு அரங்கங்களில் நடத்திக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கியுள்ளது. விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீரர்கள் கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.