விஜய் டிவியில் புதிதாக தொடங்க இருக்கும் “சிப்பிக்குள் முத்து” தொடர் – ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள “சிப்பிக்குள் முத்து” சீரியல் பற்றிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பொன்னி கதாபாத்திரம் எப்படிபட்டவள் அவர் தனது அக்கா மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் என்பது பற்றி காட்டப்பட்டுள்ளது.
சிப்பிக்குள் முத்து
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். அந்த வகையில் ஏகப்பட்ட சீரியல்கள் காலை முதல் ஒளிபரப்பாகி வருகிறது. TRPயில் போட்டி போடும் ஏகப்பட்ட சீரியல்கள் இருந்தாலும் பல புதிய கன்டென்ட் உடன் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. கணவன் மனைவி பாசம், மாமியார் மருமகள் பாசம், அம்மா மகள் பாசம், அப்பா மகள் பாசம் என பல கான்செப்ட் உடன் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
சொந்த ஊரில் பிரம்மாண்டமாக புது வீடு கட்டிய சிவகார்த்திகேயன் – ரசிகர்கள் வாழ்த்து மழை!
அந்த வகையில் தற்போது புதிதாக சிப்பிக்குள் முத்து என்ற சீரியல் தொடங்கப்பட்டுள்ளது. அந்த சீரியல் சகோதரிகளின் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. தனது தங்கைக்காக எல்லாம் செய்யும் அக்கா தனது வாழ்க்கையை கொடுக்க தயாராக இருப்பதே கதையாக இருக்கிறது. மேலும் தங்கை பொன்னி கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதன் படி பொன்னிக்கும் தனது அக்காவை மிகவும் பிடிக்கும்.
TN Job “FB Group” Join Now
தனது அக்காவிற்காக எல்லாம் செய்தாலும் அக்கா சொல்வது எல்லாம் சரி தான் என நம்பாத பெண்ணாக பொன்னி கதாபாத்திரம் காட்டப்பட்டுள்ளது. இந்த சீரியல் குறித்த முதல் ப்ரோமோவில் பொன்னி ஒருவரை காதலிக்க தனது அக்காவிடம் உதவி ஒன்றை கேட்கிறார். அதன் பின் பொன்னியின் காதலரின் அண்ணனை அக்கா திருமணம் செய்ய வேண்டும் அவருக்கு மனநிலை சரி இல்லாமல் இருக்கிறது. இருந்தாலும் தனது தங்கைக்காக அக்கா தனது வாழ்க்கையை பணயம் வைக்க போகிறார் என்பதே கதையாக இருக்க போகிறது. இந்த சீரியல் நாளை ( ஏப்ரல் 18) முதல் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.