நாடு முழுவதும் உள்ள மெட்ரோவில் பயணிக்க இனி ஒரே சிங்கார சென்னை அட்டை தான் – பயணிகள் மகிழ்ச்சி!

0
நாடு முழுவதும் உள்ள மெட்ரோவில் பயணிக்க இனி ஒரே சிங்கார சென்னை அட்டை தான் - பயணிகள் மகிழ்ச்சி!
நாடு முழுவதும் உள்ள மெட்ரோவில் பயணிக்க இனி ஒரே சிங்கார சென்னை அட்டை தான் - பயணிகள் மகிழ்ச்சி!
நாடு முழுவதும் உள்ள மெட்ரோவில் பயணிக்க இனி ஒரே சிங்கார சென்னை அட்டை தான் – பயணிகள் மகிழ்ச்சி!

மெட்ரோ நிர்வாகம் தற்போது அறிமுகம் செய்துள்ள சிங்கார சென்னை என்கிற அட்டையின் மூலமாக நாடு முழுவதும் உள்ள மெட்ரோவில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கார சென்னை அட்டை

பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து சிங்கார சென்னை அட்டை என்கிற புதிய திட்டத்தை சென்னை மெட்ரோ நிர்வாகம் தற்போது அறிமுகம் செய்திருக்கிறது. அதாவது, இந்த சிங்கார சென்னை அட்டையின் மூலமாக சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட நாட்டின் அனைத்து மெட்ரோ ரயில்களிலும் பயணம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சன் டிவியில் டாப் சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் தொடக்கம் – இயக்குனர் சொன்ன அப்டேட்!

தற்போது இதில் முதற்கட்டமாக கோயம்பேடு, சென்ட்ரல், விமான நிலையம், கிண்டி, திருமங்கலம், உயர் நீதிமன்றம், ஆலந்தூர் ஆகிய ஏழு மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த அட்டையை இலவசமாகவே பெற்றுக்கொள்ளும்படியாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

தற்போதைக்கு மெட்ரோ ரயில் பயணத்திற்காக மட்டுமே உருவாக்கம் செய்யப்பட்டுள்ள இந்த சிங்கார சென்னை திட்டம் கூடிய விரைவில் பேருந்து, புறநகர் ரயில் ஆகியவற்றில் பயணிக்கும் பயணிகளுக்காகவும் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் சிங்கார சென்னை அட்டையை பெறுவதற்கான படிவத்தினை பூர்த்தி செய்த சில நிமிடங்களிலே அதற்கான அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிங்காரச் சென்னை அட்டையை வாங்கிய நிமிடத்திலிருந்து கட்டண வசூல் கேட்டுக்களில் இந்த அட்டையை பயன்படுத்தி பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!