சன் டிவியில் முடிவுக்கு வரும் ‘சித்தி 2’ சீரியல் – ரசிகர்கள் அதிர்ச்சி! உண்மை நிலவரம் என்ன?
சன் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கும் சித்தி 2 தொடர் இன்னும் சில நாட்களில் முடிவடைய போவதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சித்தி 2 சீரியல்:
சன், விஜய், கலர்ஸ் டிவி, ஜீ தொலைக்காட்சி சீரியல்கள் தான் மக்களின் மத்தியில் நல்ல ஒரு இடத்தை பிடித்து வருகிறது. டிஆர்பியிலும் விஜய் மற்றும் சன் டிவி தான் அடிக்கடி மோதி கொண்டிருக்கிறது. திரைப்படங்களை விட மக்கள் அதிகமாக சீரியல்களை தான் பார்த்து வருகின்றனர். மக்களின் விருப்பத்தை புரிந்து கொண்டு காலையில் இருந்து மாலை வரைக்கும் விடாது சீரியலை ஒளிபரப்பி வருகின்றனர். அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் சித்தி 2 என்னும் தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
பிளாஸ்டிக் சர்ஜரியால் திடீரென உயிரிழந்த பிரபல சீரியல் நடிகை – ரசிகர்கள் ஷாக்!
இந்த தொடரில் பிரீத்தி சர்மா, நந்தன் லோகநாதன் மற்றும் தர்ஷனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அதாவது வெண்பா கதாபாத்திரத்தில் பிரீத்தி சர்மாவும், யாழினி கதாபாத்திரத்தில் தர்ஷனாவும், கவின் கதாபாத்திரத்தில் நந்தன் லோகநாதனும் நடித்து வருகிறார்கள். ஆரம்பத்தில் சித்தி தொடரை ராதிகா தான் இயக்கியும், நடித்தும் வந்தார். சில நாட்களுக்கு முன்பாகவே ராதிகா சித்தி 2 தொடரில் இருந்து ராதிகா விலகிக்கொண்டார். தற்போது ராதிகா கலைஞர் தொலைக்காட்சிக்காக ஒளிபரப்பாக இருக்கும் பொன்னி C/o ராணி என்கிற புதிய சீரியல் ஒன்றை இயக்கி கொண்டிருக்கிறார்.
Exams Daily Mobile App Download
சித்தி 2 தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் கூடிய விரைவில் முடிவடைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் சீரியல் நன்றாக தானே சென்று கொண்டிருந்தது, எதற்காக சீரியலை பாதியிலேயே நிறுத்த வேண்டும் என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கண்டிப்பாக சித்தி 2 தொடர் நிறைவடைய தான் போகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஒரு வேளை சித்தி 2 தொடர் முடிவடைந்து விட்டாலும் அடுத்த சீசன் ஒளிபரப்பாகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.