பிளாஸ்டிக் சர்ஜரியால் திடீரென உயிரிழந்த பிரபல சீரியல் நடிகை – ரசிகர்கள் ஷாக்!
பெங்களூரில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட பிரபல கன்னட நடிகையான சேத்தனா ராஜ் தற்போது உயிரிழந்துள்ளார். மேலும் மருத்துவர்களின் அலட்சியத்தால் தான் சேத்தனா உயிரிழந்துள்ளதாக பெற்றோர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சேத்தனா ராஜ்:
பிரபல கன்னட தொலைக்காட்சி நடிகையான சேத்தனா ராஜ் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதன் விளைவாக மரணமடைந்த விஷயம் உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீதா, டோரேசானி போன்ற கன்னட சீரியல்களில் சேத்தனா ராஜ் நடித்திருக்கிறார். பெரும்பலான நடிகர்கள் மற்றும் நடிகைகள் பட வாய்ப்பிற்காக முகத்தை சீராக்க அல்லது முகத்தில் உள்ள கொழுப்பை குறைக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்கின்றனர். அதேபோல பட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக சேத்தனாவும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தில் உள்ள கொழுப்பை குறைக்க நினைத்திருக்கிறார்.
Exams Daily Mobile App Download
பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதை பெற்றோர்களிடம் கூட தெரிவிக்காமல் நண்பர்களை மட்டும் அழைத்துக் கொண்டு நேற்று காலையில் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஃபேட் ஃப்ரீ (Fat Free) சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார். காலையில் அறுவை சிகிச்சை செய்து சில மணி நேரத்திலேயே உடலில் பல மாற்றங்கள் ஏற்பட துவங்கியிருக்கிறது. மாலை நேரத்திற்குள் சேத்தனாவின் நுரையீரலில் நீர் கோர்க்க ஆரம்பித்திருக்கிறது. சேத்தனாவின் நிலைமையும் பார்த்து மருத்துவர்களும் குழம்பியுள்ளனர்.
நுரையீரலில் நீர் கோர்க்க ஆரம்பித்த பிறகும் கூட சேத்தனாவிற்கு மருத்துவர்கள் சிகிச்சை நடத்தி வந்தனர். ஆனால், சேத்தனா மருத்துவமனையிலேயே அகால மரணமடைந்துள்ளார். சேத்தனாவின் பெற்றோர்கள் சேத்தனாவின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதாவது, சேத்தனாவின் மரணத்திற்கு மருத்துவர்களின் அலட்சியம் தான் காரணம் என பெற்றோர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் மருத்துவமனைக்கு எதிராக பெற்றோர்கள் புகாரளித்துள்ளனர்.