தமிழ்நாடு காவல்துறையில் 450 உதவி ஆய்வாளர் உட்பட 10000 காலிப்பணியிடங்கள் – விரைவில் அறிவிப்பு!
தமிழக காவல் துறையில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. அதனால் வேலை தேடும் இளைஞர்கள் கொரோனா ஊரடங்கு காலத்தை சரியாக பயன்படுத்துமாறு காவல்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
காவல்துறை:
நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது, மக்களுக்கு பாதுகாப்பை அளிப்பது போன்ற பணிகளில் காவல் துறையின் பங்கு இன்றியமையாதது ஆகும். தற்போது பரவி வரும் கொரோனா பேரிடர் காலத்தில் காவலர்கள் தன் நலம் கருதாது பணி செய்து வந்தனர். தமிழகத்தில் காவலர், சிறைக்காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் போன்ற இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு சீருடை பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் முதல் கட்டமாக எழுத்துத் தேர்வும், அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு இரண்டாம் கட்டமாக உடற்தகுதித் தேர்வும் நடத்தப்படும்.
வார இறுதி ஊரடங்கு உத்தரவு நீக்கம்? மாநில அரசு ஆலோசனை!
இந்த இரண்டு தேர்வுகளையும் அடிப்படையாக வைத்து தேர்ச்சி பெற்றவர்கள் பணியமர்த்தப்படுவார்கள். அந்த வகையில் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற TNUSRB (PC) பணியிடங்களுகானத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த 2021ம் ஆண்டு உடல்தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. அதன் பிறகு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று முடிந்தது. தேர்வு செய்யப்பட்ட 10,391 பேருக்கு அடுத்த மாதம் முதல் 8 மாத கால பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி முடிந்த பிறகு அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
மாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்!
கடந்த 2021 ஜூன் மாத நிலவரப்படி தமிழக காவல்துறையில் 1,33,198 காவலர்கள் அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து தற்போது தமிழக காவல் துறையில் புதிதாக 10,000 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் சுமார் 450 காவல் உதவி ஆய்வாளர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதனால் படித்த வேலை தேடும் இளைஞர்கள், காவல் பணியில் ஆர்வம் கொண்டவர்கள் தகுதிவாய்ந்த பட்டதாரிகள் போன்றோர் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி காவலர் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று காவல்துறை அதிகாரி அறிவுரை வழங்கினார்.