பகல் 1 மணி வரை மட்டுமே கடைகள் செயல்படும் – வணிகர் சங்கம் அறிவிப்பு!!
தமிழகத்தில் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் 1 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் விற்கப்படும் கடைகள் திறந்து இருக்கும் என வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
வணிகர் சங்கம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. மேலும் தொற்று பரவல் குறையாத காரணத்தலாலும் மக்கள் தேவையற்ற காரணங்களால் வெளியில் சுற்றி திரிவதால் அரசு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பித்தது. இதனால் காய்கறி, மளிகை போன்ற அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விற்கப்படும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. ஜூன் 7ம் தேதிக்கு பிறகு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
தமிழக அரசின் இ-பதிவில் புதிய வசதி – பொதுமக்கள் கோரிக்கை!
கொரோனா பரவல் குறைந்துள்ள பகுதிகளுக்கு மட்டுமே இந்த தளர்வுகள் அளிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ள போதிலும் கூடலூர், பந்தலூர், மசினகுடி ஆகிய தாலுகாக்களில் தொற்று அதிகமாக உள்ளது. அரசு அறிவித்த தளர்வுகளை முழுமையாக செயல்படுத்தாமல், அப்பகுதி வணிகர்கள் மதியம் 1 மணி வரை கடைகள் திறந்தனர். பெருகி வரும் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர, கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இதில், அனைத்து கடைகளையும் ஜூன் 14ம் தேதி வரை அடைக்க உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. மருந்து கடைகள், பாலகங்கள் மட்டுமே செயல்பட்டன. தற்போது அப்பகுதிகளில் முழு ஊரடங்கு முடிவடைந்த நிலையில் ஜூன் 14 முதல் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் செயல்படும் என வணிகர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.