செப்.11ம் தேதிக்குள் தடுப்பூசி போடாவிட்டால் கடைகள் மூடப்படும் – நகராட்சி ஆணையர் எச்சரிக்கை!

0
செப்.11ம் தேதிக்குள் தடுப்பூசி போடாவிட்டால் கடைகள் மூடப்படும் - நகராட்சி ஆணையர் எச்சரிக்கை!
செப்.11ம் தேதிக்குள் தடுப்பூசி போடாவிட்டால் கடைகள் மூடப்படும் - நகராட்சி ஆணையர் எச்சரிக்கை!
செப்.11ம் தேதிக்குள் தடுப்பூசி போடாவிட்டால் கடைகள் மூடப்படும் – நகராட்சி ஆணையர் எச்சரிக்கை!

திருப்பத்தூர் நகராட்சியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் வரும் செப்டம்பர் 11ம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால் கடைகள் மூடப்படும் என்றும் நகராட்சி ஆணையர் ஏகராஜ் அறிவித்துள்ளார்.

அனைவருக்கும் தடுப்பூசி:

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்புகள் குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதனால் அனைத்து வணிக நடவடிக்கைகளும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா தொற்றின் 3ம் அலை பாதிப்பு தமிழகத்தில் ஏற்படாமல் இருப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிக அளவில் பரவி வருகிறது. இதனால் தமிழக எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

ICC Test தரவரிசை பட்டியல் – டாப் 10 வரிசையில் பும்ரா & தாகூர் முன்னேற்றம்!

அனைத்து பயணிகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அறிகுறி உள்ள பயணிகள் தனிமைப்படுத்தலில் வைக்கப்படுகின்றனர். இந்நிலையில், திருப்பத்தூர் நகராட்சி ஆணையர் ஏகராஜ், நகராட்சி சுகாதார ஆய்வாளர் விவேக் மற்றும் நகராட்சி ஊழியர்கள் திருப்பத்தூர் பஜார் பகுதி, மார்க்கெட் பகுதிகளில் ஒலிப்பெருக்கி மூலம் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வியாபாரிகள் முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். அதன் பிறகு, திருப்பத்தூர் நகராட்சி ஆணையர் ஏகராஜ் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசினார்.

தமிழகத்தில் திருமண உதவித்தொகை ரூ.5 ஆயிரமாக உயர்வு – அமைச்சர் அறிவிப்பு!

அப்போது, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வியாபாரம் செய்து வரும் அனைத்து வகையான வியாபாரிகள், கடை உரிமையாளர்கள், கடைகளில் பணியாற்றி வரும் பணியாளர்கள் என அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்தி, அதற்கான சான்றிதழைக் கையில் வைத்திருக்க வேண்டும். அனைவரும், செப்டம்பர் 11-ம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்குள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படும். திங்கட்கிழமை முதல் நகராட்சி அதிகாரிகள் ஒவ்வொரு பகுதியாக ஆய்வுக்கு வரும்போது தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை அவர்களிடம் வியாபாரிகள் காட்ட வேண்டும். இல்லையென்றால் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!