வச்சான் பாரு ஆப்பு.. பிக் பாஸ் ரசிகர்களுக்கு வெளியான அதிர்ச்சி செய்தி – நீங்க நினைச்சது நடக்கல!
சின்னத்திரை ரசிகர்கள் பெரிதும் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதன் ஆறாவது சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது..
பிக் பாஸ்:
விஜய் டிவியில் 2017 ஆம் ஆண்டு தொடக்கப்பட்டு சக்கை போடு போட்டு வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் முதல் சீசனில் ஆரவும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகினும் வெற்றி பெற்றனர். கடைசி இரண்டு சீசன்களில் ஆரியும், கடந்த சீசனில் ராஜுவும் வெற்றி பெற்றனர்.
நாளை (19-09-2022) தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகள் – முழு லிஸ்ட் இதோ உங்களுக்காக!
இந்நிலையில் கடந்த சில நாட்களாக 6வது சிசனின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்த சிசனையும் உலக நாயகன் கமல் தான் தொகுத்து வழங்க உள்ளார். ரசிகர்கள் பலரும் அக்டோபர் 2 ஆம் தேதி இந்த நிகழ்ச்சி தொடங்கும் என்று எதிர்பார்த்தனர்.
Exams Daily Mobile App Download
ஆனால் அக்டோபர் 9ம் தேதி தான் பிரமாண்டமாக இந்நிகழ்ச்சி துவங்கும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இது ரசிகர்கள் பலருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை ஷில்பா மஞ்சுநாத், தர்ஷா குப்தா, அஸ்வின் போன்ற பிரபலங்கள் இந்த சீசனில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்