தமிழக வாகன ஓட்டிகளுக்கான அதிர்ச்சி தகவல் – சுங்கச்சாவடிகளில் திடீர் கட்டண உயர்வு!
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் உள்ள சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், எவ்வளவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறித்தான முழு தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கட்டண உயர்வு:
இந்தியாவில் நெடுஞ்சாலை பராமரிப்பிற்க்காக வாகன ஓட்டுநர்களிடமிருந்து சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிலும், ஆண்டு தோறும் ஜூலை மாதத்தில் சுங்கக் கட்டணத்தை அரசு உயர்த்தி வருகிறது. அதே போல இந்தாண்டும் தமிழ்நாடு தொழிற்சாலைகள் மற்றும் துறைமுகங்களின் கீழ் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை வெளிவட்ட சாலையில் இயங்கி வரும் நான்கு சுங்க சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது, வரதராஜபுரம், கோலப்பஞ்சேரி, பாலவீடு, சின்ன முல்லை வாயல் ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மேற்குறிப்பிட்டுள்ள சுங்க சாவடி வழியாக செல்லும் மூன்று சக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரையிலான அனைத்து வாகனங்களுக்கும் தினசரி கட்டணம் ரூபாய் 5 லிருந்து ரூபாய் 22 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இந்த மூன்று சக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்களுக்கான மாதாந்திர கட்டணம் ரூபாய் 194 லிருந்து ரூ.1250 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சொந்த நிலத்தில் கிடா விருந்து போட்ட விஜே மணிமேகலை – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!
இந்த கட்டண உயர்வு வரும் ஜூலை 5-ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரைக்கும் இந்த சுங்கச்சாவடி கட்டணம் அமலில் இருக்கும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது மட்டுமல்லாமல் வரும் ஜூலை 1ம் தேதி முதல் ஓஎம்ஆர் சாலையில் உள்ள சுங்கச்சாவடி கட்டண உயர்வும் அமலுக்கு வரவிருக்கிறது. இதனை அடுத்து, சுங்கச் சாவடி கட்டணத்தின் திடீர் உயர்வால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.